ஐ.நா விசேட அறிக்கையிடும் அதிகாரி வடமாகாண ஆளுநர் சந்திப்பு!

Saturday, October 14th, 2017

ஐ.நா விசேட அறிக்கையிடும் அதிகாரி பப்லோ டி கிரீஸ் தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்  குரேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மக்களின் காணி விடுவிப்பு அரசியல் நிலைமைகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடடிவக்கைகள் தொடர்பிலும் அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு அரசு முன்னெடுத்துவரும் பணிகள் தொடர்பிலும் வடமாகாண ஆளுநர் ஐ.நா பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

Related posts: