எதிர்வரும் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர்!
Monday, April 23rd, 2018நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பிலான புதிய வர்த்தமானி ஜனாதிபதியினால் இன்று(23) வெளியிடப்படும் எனவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டின் முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த எச்சரிக்கை அவசியம் – எச்சரிக...
நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்றது சேவைகள் இயங்கும் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
|
|