தோழர் நடுநாயகமூர்த்தி காலமானார்!
Thursday, August 24th, 2017ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேச முன்னாள் ஒருங்கிணைப்பாளர் நடுநாயகமூர்த்தி (தோழர் மூர்த்தி) காலமானார்.
கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்றையதினம்(23) காலமானார்.தோழர் மூர்த்தியின் பூதவுடல் வட்டுக்கோட்டையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்களது அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(27.08.2017) அன்று வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. காலஞ்சென்ற அமரர் நடுநாயகமூர்த்திக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலியை செலுத்தும் அதேவேளை, அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிக்கின்றது.
Related posts:
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!
மக்களிடம் இருந்து எம்மை துரத்த நினைத்தவர்கள் மக்களினால் துரத்தப்பட்டார்கள்: வேலனையில் தோழர் ஜெகன் மு...
உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமத...
|
|