தோழர் நடுநாயகமூர்த்தி காலமானார்!
Thursday, August 24th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேச முன்னாள் ஒருங்கிணைப்பாளர் நடுநாயகமூர்த்தி (தோழர் மூர்த்தி) காலமானார்.
கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்றையதினம்(23) காலமானார்.தோழர் மூர்த்தியின் பூதவுடல் வட்டுக்கோட்டையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்களது அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(27.08.2017) அன்று வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. காலஞ்சென்ற அமரர் நடுநாயகமூர்த்திக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலியை செலுத்தும் அதேவேளை, அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிக்கின்றது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018
தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் - யாழ் மாநகர முன்னாள் மு...
பருத்தித்துறையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்!
|
|
|


