35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்துக்கு உரிமை கோரும் ரஷ்யா!

Sunday, July 22nd, 2018

113 ஆண்டுகளின் முன்னர் இலங்கை மதிப்பில் சுமார் 35 இலட்சம் கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் தென்கொரியக்கடல் பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா வுக்கும் ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது. 1905 ஆம் ஆண்டு மே மாதம்  போர் உச்சத்தில் இருந்தபோது ர~;ய நாட்டுக்கு சொந்தமான டிமிட்ரி டான்ஸ்கோய் என்ற போரக்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது ரஷ்யா வுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில் 189 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான (சுமார் 35 லட்சம் கோடி ரூபா) தங்கக்கட்டிகளும் தங்க நாணயங்களும் வைக்கப்பட்டு இருந்தன. இவை 5 ஆயிரத்து 500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்தத் தங்கக் கட்டிகளும் நாணயங்களும் கிலோ எடை உடையன என்றும் இந்தக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் 60 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மூழ்கடிக்கப்பட்டு 113 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இந்த போர்க்கப்பல் தென்கொரியாவில் உள்ள உங்டோ தீவில் 420 மீற்றர் ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இடம், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ தொலைவிலேயே உள்ளது. தென்கொரியா, இங்கிலாந்து, கனடா நாடுகளை சேர்ந்த வல்லுநர்கள்தான் இந்தக் கப்பலை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அதில் வைக்கப்பட்டு இருந்த தங்கக்கட்டிகள், தங்க நாணயங்கள் இப்போதும் இருப்பது கண்டறியப்பட்டால் பாதி அளவு ரஷ்யாவுக்கு வழங்கப்படும் எனவும் அதைப் பயன்படுத்தி வடகொரியா வழியாக தென்கொரியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ரயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

10 சதவீதம், போரக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உங்டோ தீவின் சுற்றுலாத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும். அந்தக் கப்பலுக்காக ஒரு அருங்காட்சியகமும் நிறுவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதை ஏற்க மறுத்துள்ள ரஷ்யா தங்கம் முழுவதையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

Related posts: