2021 ஆம் ஆண்டு இரட்டைக் கோபுர தாக்குதலின் சூத்திரதாரி நீதிமன்றில்.!
Sunday, September 1st, 20192001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர் எனக் கருதப்படும் காலிட் ஷெய்க் மொஹமட் என்ற அல்கொய்தா அமைப்பின் தலைவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் திகதியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அவர் உள்ளிட்ட மேலும் 4 சந்தேகத்துக்குரியவர்களை குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கா முகாமின் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலின் ஆரம்பம் முதல் இறுதி வரையான அனைத்து திட்டங்களையும் தானே திட்டமிட்டதாக காலிட் ஷெய்க் மொமட் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட காலிட் ஷெய்க் மொஹமட், செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 20 ஆண்டுகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Related posts:
|
|