தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!
Monday, September 30th, 2019
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் 32 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவிய வன்முறைகள் காரணமாக 2 முறை அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த தேர்தல் மீண்டும் நடைபெற்றது.
இந்த தேர்தலின் போது நாடு முழுவதும் 132 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல்களில் 32 பேர் பலியானதுடன், 123 பேர் காயம் அடைந்ததாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 132 தாக்குதல்களில் 64 தாக்குதல்களுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமானம் தரையிறங்கிய போது விபரீதம் : மயிரிழையில்உயிர்தப்பிய 163 பயணிகள்!
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற்றம்: ஜேர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டுக்கு அதிஸ்டம்!
பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!
|
|
|


