வியட்நாமில் கடும் மழை – வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 20 பயணிகளை தேடும் மீட்பு பணியாளர்கள்!
Tuesday, September 10th, 2024
வியட்நாமில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய வியட்நாமின் காவ் பாங் மாகாணத்தில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்தில் 20 பயணிகள் வரையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து காவ் பாங் மாகாணத்தில் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மண்சரிவுகள் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000
Related posts:
ஆங்கில் எழுத்தான N என்ற எழுத்தை தடைசெய்யும் சீனா!
தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி – மன்னர் கடும் எதிர்ப்பு!
புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்!
|
|
|


