விமானிகள் வேலை நிறுத்தம்: 3 லட்சத்திற்கு மேலானோர் பாதிப்பு!

Saturday, November 26th, 2016

 

விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்ற நிலையில், ஜெர்மனி பயணியர் போக்குவரத்து நிறுவனமான லூஃப்தான்ஸாவின் 800-க்கு மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானிகள் வைக்கின்ற சுமார் 4 சதவீத ஊதிய உயர்வு கட்டுபடியாகாது என்று லூஃப்தான்ஸா நிறுவனம் கூறுகிறது.சமீபத்திய இந்த வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கிய நிலையில், உள்நாட்டிலும், ஐரோப்பாவிலும் 3 லட்சத்திற்கு மேலான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2014 ஆம் ஆண்டு முதல் இந்த விமான போக்குவரத்து நிறுவனத்தில் நடைபெறும் 14-வது வேலைநிறுத்தம் இதுவாகும்.

_92657590_1b1ffcbc-4076-43d0-9a48-9fbd83c1386b

Related posts: