வலுவடைந்து செல்கிறது இந்தியா- பாகிஸ்தான் மோதல்!

Saturday, October 29th, 2016

இந்தியாவின் உரி இராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் இருநாட்டுகளின் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு காஷ்மீரில் குப்வார பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இராணுவ வீரர் ஒருவரை சிறைபிடித்ததுடன் மிக கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசியுள்ளனர்.

எல்லையில் மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு இராணுவம் தக்க பதிலடி தரும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் கஷ்டப்படுவதால் தான் நாம் தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

india

Related posts: