வடகொரிய ஜனாதிபதி தென் கொரிய தூதுக்குழுவினருடன் சந்திப்பு!

Wednesday, March 7th, 2018

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தென்கொரிய தூதுக்குழுவினருடன் கலந்துரையாடியுள்ளார்.

கொரியப் போருக்குப் பிறகு வட ௲ தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.

அந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும், நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங் உன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சூழலில், வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நல்லெண்ணத் தூதுக் குழுவை வட கொரியாவுக்கு அதிபர் மூன் ஜே இன் அனுப்பினார்.

வடகொரியாவுக்கு வந்த தென்கொரிய குழு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தணிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: