ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திக்கொள்கிறோம் – உலக வங்கி அறிவிப்பு!

Monday, March 7th, 2022

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது.

பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவிலும், அதன் நட்பு நாடான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது.

இதுதொடர்பில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் உக்ரைன் மக்களுக்கு எதிரான விரோதத்தைத் தொடர்ந்து, உலக வங்கி குழு ரஷ்யா மற்றும் பெலாரசில் உள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியபோது உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கண்டனம் வெளியிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

000

Related posts: