ரயில் விபத்தை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி!

Friday, August 11th, 2017

ரஷ்யாவில் பாரிய ரயில் விபத்தை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட சதியை சமயோசிதமாக செயல்பட்டு முறியடித்துள்ளதாக அங்குள்ள சிறப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் கடற்படை தினம் கொண்டாடும் வேளையில் குறித்த தாக்குதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் முடிவு செய்திருந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆனால் அந்த திட்டம் சிறப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டதும், யூலை 30 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அந்த திட்டத்தையும் அதிரடிப்படையினர் முறியடித்துள்ளனர். குறித்த விழாவில் கூட்டத்தின் மத்தியில் வெடிபொருட்கள் நிரப்பிய லொறி ஒன்றை செலுத்தி பாரிய விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுக்கடுக்கான இந்த சதி திட்டங்கள் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் பலரையும் ரஷ்ய பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி கைதானவர்களில் பெரும்பாலானோர் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் குடியேறியவர்கள் என கூறப்படுகிறது.

இருப்பினும் கைதான நபர்கள் எந்த நாட்டவர்கள் என்ற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related posts: