மிரட்டும் சீனா; பதட்டத்தில் இந்தியா!

Saturday, August 12th, 2017

சிக்கிம் எல்லைப்பகுதியில் டோக்லாம் பகுதியில் சீனப்படையினர் அத்துமீறிய ஆக்ரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனால் எல்லையில் போர்ப்பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இரு நாட்டு இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால், டோக்லாம் பகுதியில் உள்ள நதாங் எனப்படும் கிராமத்தில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் கடந்த 16ஆம் திகதி முதல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சீன இராணுவம் படைவீரர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

டோக்லாம் பகுதியில் உள்ள இந்திய படைகளை அங்கிருந்து வெளியேறுமாறு சீன இராணுவம் தொடர்ந்தும் எச்சரித்து வருவதோடு அவ்வாறு செய்யப்படாவிட்டால் போர் தொடுப்பதாகவும் மிரட்டி வருகின்றது.இதேவேளை, அண்டை நாடுகள் அளிக்கும் சவால்களை சந்திக்க போதுமான வலிமை இந்திய படைகளுக்கு இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: