மாலைத்தீவில் பதற்றம்!

Monday, July 24th, 2017

மாலைத்தீவு நாடாளுமன்றம் அந்நாட்டு இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாலைத்தீவு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதை தடுக்கும் வகையில் மாலைத்தீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கயூமின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவத்தினரால் நாடாளுமன்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆயுதம் தாங்கிய மாலைத்தீவு இராணுவத்தினரால் நாடாளுமன்ற நுழைவாயில்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக்க் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts: