மலேசியாவில் உள்ள  இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Friday, November 3rd, 2017

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில்புரிகின்ற இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக மாதாந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் டடுக் செரி முஸ்தஃபார் அலி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில் புரிகின்றவர்களை பதிவு செய்துக் கொள்வதற்காக அங்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணியாளர்களுக்கு இலத்திரனியல் அட்டை(e-card) வழங்கப்பட்டு, அவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் கடந்த ஜுலை மாதம் வரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் சட்டவிரோத பணியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Related posts: