மனையின் உடலை சுமந்து சென்ற மஞ்சியை நண்பனாக்கி உதவ முன்வந்துள்ள பஹ்ரைன் பிரதமர் !

Monday, August 29th, 2016

இந்தியருக்கு நாடுகள்கடந்து உதவ முன்வந்தார் பஹ்ரைன் மன்னர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இறந்த தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற செய்தி உலகையே உலகியது.

இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் Khalifa_bin_Salman_Al_Khalifa முன்வந்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பில்: இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்த மடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியைதன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு நாடுகடந்த மனிதநேய உதவி கிடைக்கும்.

Related posts: