போலந்தில் சமையல் எரிவாயு வெடிப்பால் கட்டடம் இடிந்து 4 பேர் பலி!

Monday, March 5th, 2018

போலந்து நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட சமையல் எரிவாயு வெடிப்பு காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

போலந்து நாட்டின் பொஸ்னான் நகரில் உள்ள அடுக்குமாடியில் 18 குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டடத்தில் ஒரு பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதன்காரணமாக அந்த கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஒரு வீட்டில் ஏற்பட்ட சமையல் எரிவாயுக் கசிவுதான் இந்த விபத்துக்கு காரணம் எனத்தெரிய வந்துள்ளது.

Related posts: