போராட்டங்களின் எதிரொலி: ஈராக் பிரதமர் இராஜினாமா..!

Saturday, November 30th, 2019

ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடென்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது.

தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திண்டாட்டம் தாண்டவமாடி வருகிறது. ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அரசின்மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக பிரதமர் அதெல் அப்துல் மஹதிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலியாக, அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: