பொலிஸ்நிலையத்திற்குள் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

Saturday, May 29th, 2021

பிரான்சில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட முன்னாள் சிறைக்iதியொருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கத்திக்குத்திற்கு இலக்கான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்தினை மேற்கொண்ட நபர் வன்முறை குற்றமொன்றிற்காக எட்டுவருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தவர், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர் என்பதால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தீவிரமாக இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றார் தீவிரவாதமயப்படுத்தப்பட்டுள்ளார் என்பதற்காக கண்காணிக்கபபடவேண்டியவர் என 2016 இல் அறிவிக்கப்பட்டதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இதேபோன்ற தாக்குதலில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: