பொருளாதார தடையினை விதிப்பதால் பயனில்லை – சீனா!
Monday, August 7th, 2017
வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடையினை விதிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வினை எட்ட முடியாது என சீனா தெரிவித்துள்ளது
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் ஏகமனதாக வடகொரியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மேலதிக பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே சீனா இதனை தெரிவித்துள்ளது
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்டவர்கள் பேச்சு வார்த்தையினை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மேலதிக பொருளாதார தடை காரணமாக வட கொரியா வருடாந்தரம் 300 கோடி அமெரிக்க டொலர்கள் வர்த்தகத்தினை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
மெக்சிக்கோவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி!
|
|
|


