பேருந்து விபத்தில் : பெருவில் 44 பேர் பலி!
Friday, February 23rd, 2018
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 44 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் உள்ள பானாமெரிகான நெடுஞ்சாலையில் சுமார் 45 பயணிகளுடன் சென்ற பேருந்து, வளைவில் திரும்பிய போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
சோதனைகள் மேற்கொள்வதை வடகொரியா தவிர்க்க வேண்டும் – சீனா
இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலத்திலும் கொரோனா தொற்று – 100 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல்!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சகோதரர் காலமானார்!
|
|