பேருந்து விபத்தில் : பெருவில் 44 பேர் பலி!
Friday, February 23rd, 2018
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 44 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் உள்ள பானாமெரிகான நெடுஞ்சாலையில் சுமார் 45 பயணிகளுடன் சென்ற பேருந்து, வளைவில் திரும்பிய போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
சீனாவுக்கு தென் கொரியா எதிர்ப்பு!
அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்...
வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் – கேரளா மாநிலம் முழுவதும் முடக்கப்படுமா என மக்கள் அசச்சம்!
|
|
|


