பாலம் இடிந்து விபத்து 30 பேர் பலி: இத்தாலியில் சோகம்!

Wednesday, August 15th, 2018

இத்தாலியில், கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில், 30 பேர் பலியாயினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் கினோவா நகரில், நேற்று காலை கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பாலம், திடீரென இடிந்து விழுந்தது. இதில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்தோர், போலீசாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: