பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் கொடூர தாக்குதல்:18 பேர் பலி!
Monday, August 29th, 2016
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஐன் தமீர் என்ற கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 5 பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டனர். வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தற்கொலைப் குண்டுதாரி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் மொத்தமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர், 4 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கணிணிகளில் ஊடுருவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நாடு கடத்த லண்டன் நீதிபதி உத்தரவு!
அமெரிக்கத் தூதரகத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளது!
ஜிம்பாப்வேயில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்!
|
|
|


