பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட மலாலா!

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக அமைதிக்கான நோபல் பரிசில் வழங்கப்பட்ட மலாலா யூசாப்சாய் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
தலிபானிய தீவிரவாதிகளால் 2012ம் ஆண்டு பெண்களின் கல்விக்காக போராட்டம் நடத்தியபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் பெண்களுக்கான கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
ஆகையால் இதனை மையப்படுத்தி அவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.
அவர் தற்போது பாகிஸ்தான் செல்லும் நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் சாஹிட் ககான் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார். இந்தப் பயணம் குறித்த தகவல்கள் இரகசியமாகப் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வருகிறது ஸ்மார்ட் பாஸ்போர்ட்!
ஆயுதங்களை ஒப்படைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள்!
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது சீனா!
|
|