பாகிஸ்தானில் ரயில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவித்துள்ளன.
மாகாண தலைநகரான குவெட்டாவிலிருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற விரைவு ரயிலை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் என்று தகவல் வெளியாகி உள்ளது.முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 20 நிமிடங்களுக்கு பிறகு அடுத்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த வெடிகுண்டுகள் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டனவா அல்லது ரயிலுக்குள் வைக்கப்பட்டனவா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராக உள்ளது - தென்கொரியா!
ஆள் இல்லாமல் ஓடிய மின்சார ரயில் : சினிமா பாணியில் துரத்திப் பிடித்த ஊழியர்!
கொரோனா தாண்டவம் : காவுகொள்ளப்பட்ட ஆறு மாத பச்சிளம் குழந்தை - அமெரிக்காவில் உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை ...
|
|