பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

Wednesday, August 1st, 2018

மெக்சிக்கோவில் 101 பேருடன் சென்ற ஏரோமெக்சிகோ எனும் விமானம் திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் விமானம் ஒன்று மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே திடீர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது விமானத்தில் பயணம் செய்த 85 பேர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக டுராங்கோ மாகாண கவர்னர் ஜோஸ் ரோசாஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் உடனடியாக தரையிறப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழவில்லை எனவும் தெரிவித்தார்.

Related posts: