படகு விபத்தில் 90 பேர் பலி!

Saturday, February 3rd, 2018

லிபியாவின் கடலோர பகுதியில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பெரும்பாலானவர்களே கடலில் மூழ்கியவர்கள் என்று அந்த படகு விபத்தில் இருந்து தப்பிய மூவர் கூறியுள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் இருவர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஐரோப்பாவிற்கு இந்த ஆண்டில் இது வரை 6 ஆயிரத்து 624 பேர் கடல் மார்க்கமாகச் சென்றுள்ளதாக குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்புகூறியுள்ளது.

2017இன் இப் பகுதியில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 983ஆக இருந்தது. 2018இல் இதுவரை உலகம் முழுவதும்  தஞ்சம் அடைந்தவர்களில் 246 பேர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: