நெதர்லாந்து தாக்குதல் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு – பிரதான சந்தேக நபர் கைது!

Tuesday, March 19th, 2019

நெதர்லாந்தின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ள நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலின் பின் துருக்கி நாட்டவரான 37 வயதுடைய கொக்மன் டனிஸ் (Gokmen Tanis), என்ற சந்தேக நபர் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 03 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: