நீதிமன்று அதிரடி – நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை!

Friday, April 6th, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவரை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அவரது தரப்பில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: