நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மீள நாட்டுக்கு அழைப்பதாக டியூனிசியா, ஜெர்மனியிடம் உறுதி!
Sunday, March 5th, 2017
நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மீள நாட்டுக்கு அழைப்பதாக டியூனிசியா, ஜெர்மன் அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளது. ஜெர்மனியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட 1500 புகலிடக் கோரிக்கையாளர்களையே ஏற்றுக் கொள்வதாக டியூனிசியா அறிவித்துள்ளது.
தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவு தொகை வழங்கப்படும் என ஜெர்மனிய அதிபர் என்ஞலா மோர்கல் தெரிவித்துள்ளார். டியூனிசியாவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள ஜெர்மன் 250 மில்லியன் யூரோக்களை வழங்க ஜெர்மன் தீர்மானித்துள்ளதாக மோர்கல் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜாம்பியாவின் ஜனாதிபதியாக மீண்டும் எட்கர் லுங்கு!
அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலில் 11 பேர் பலி!
காப்பல் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் ஐக்கிய அரபு இராச்சியம் முறையீ...
|
|