நியுசிலாந்தின் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நால்வர் காயம்!

Monday, May 10th, 2021

நியுசிலாந்தின் டனேடனில் வணிகவளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

என்ற வணிகவளாகத்தில் நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை நால்வர் காயமடைந்துள்ளனர் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பணியாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரும் காயமடைந்துள்ளார். வணிக வளாகத்தின் மருந்தகபிரிவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை நேரில் பார்த்த பலர் குறிப்பிட்ட நபரை எதிர்கொண்டு மேலும் பலரை அவர் காயப்படுத்துவதை தடுத்து நிறுத்தினார்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: