தொடருந்து விபத்து: காங்கோவில் 33 பேர் பலி!
Monday, November 13th, 2017
ஆபிரிக்க நாடான காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற தொடருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு எரிபொருளை ஏற்றிய 13 பெட்டிகளில் கொண்ட தொடருந்தொன்று பயணித்துள்ளது. இந்த சரக்கு தொடருந்தில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். குறித்த தொடரூந்து மலை சிகரம் ஒன்றின் ஊடாக பயணித்த போது தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்தில் 33 பலியானதாக அந்தநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. றித்த தொடரூந்து சரக்கு ஏற்றிச் செல்லும் தொடரூந்து என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவதாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இலண்டன் கத்திக்குத்தில் ஒருவர் பலி!
சிரியாவின் தாற்காலிக போர் நிறுத்த முயற்சி தோல்வி!
மலேசியாவின் மன்னரானார் சுல்தான் அப்துல்லா!
|
|
|


