தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பேர் பலி!

Monday, December 4th, 2017

நைஜீரியாவின் வடகிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பியூ நகரில் உள்ள பொதுச்சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 17 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்

இந்த தாக்குதலின்போது மேலும் 47 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

யமடைந்தவர்களில் பலரது நிலைய கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், போக்கோ ஹராம் அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் போக்கோ ஹராம் அமைப்பு நடத்திய தாக்குதல்களால் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 17 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 400 பேர் கொல்லப்பட்டமைக்கு போக்கோ ஹராம் அமைப்பினர் பெறுபேற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts: