தமிழகத்தில் கொரோனா தாண்டவம்: ஒரே நாளில் 107 பேர் பலி !

Wednesday, August 26th, 2020

தமிழகத்தில் நேற்று 25 ஆம் திகதி 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் கொரோனா பாதிப்பால் 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநிலத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி செய்திக் குறிப்பொன்றை நேற்று மாலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக சென்னையில் 1,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,937. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 14 பேர். ஆக மொத்தம் இன்று 5951 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களில் 3,615 பேர் ஆண்கள், 2336 பேர் பெண்கள்.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,32,454 பேர் குணமடைந்துள்ளனர். 52,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related posts: