டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கை!

Friday, December 22nd, 2017

தங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எந்த உதவியும் வழங்கப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகரம் என்று அண்மையில் அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு வருகிறது.

இதற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் அனைத்து ரத்து செய்யப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: