ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவிப்பு!
Friday, August 28th, 2020
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சுகாதார பிரச்சினைகள் காரணமாக பதவி விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உடல்நலக் குறைவுக்கு மத்தியில் பிரதமர் அபே இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ம் ஆண்டு 2 ஆம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பின் அபே 2,799 நாட்களை வெற்றிகரமாக அப்பதவியில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2007 ஆம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுற்று வரும் அபே, தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!
சிம்பாப்பேயின் புதிய ஜனாதிபதி நியமனம்!
விமானம் நொருங்கி விழுந்து ஐவர் பலி!
|
|
|


