சுவீடனில் தாக்குதல் : 5 பேர் பலி!

Friday, April 7th, 2017

சுவீடன் தலைநகர் Stockholm நகரில் மக்கள் கூட்டத்தில் லொறி ஒன்றை மோத செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அந்நாட்டு நேரப்படி 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விற்பனை நிலையம் ஒன்றில் கூடியிருந்த மக்கள் மத்தியில் லொறி ஒன்று மோதியுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் துப்பாக்கி சூடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறுகிய நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: