சீனாவை தாக்கிய புயல் : 178 வீடுகள் சேதம்!

Monday, July 31st, 2023

சீனாவின் புஜியான் மாகாணத்தை டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே , சீனாவின் பல மாகாணங்களை டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

டோக்சூரி புயல் கரையை கடந்த போது பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த புயல் காரணமாக 178 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் , சுமார் ஆறாயிரம் ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது. இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: