சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக இருக்க வேண்டும் – ரஷ்யா!
Thursday, February 2nd, 2017சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் கொள்கை திட்டவட்டமானதாக அமைய வேண்டுமேன ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov இதனைத் தெரிவித்துள்ளார். லிபியாவில் இதே விதமாக ஒர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது எனவும் சிரியாவில் பாதுகாப்பான வலயங்களை உருவாக்குதல் சாத்தியப்படுமா என ட்ராம்ப் தெளிவுபட கூற வேண்டுமெனவும் ரஷ்யா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வெனிசுலாவில் பாரிய போராட்டம் - 16 பேர் பலி!
ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
திறக்கப்பட்டது எகிப்தின் ரஃபா எல்லை - பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் சென்றடைந்தது நிவாரணப் ...
|
|