சரியான பதிலடி கொடுப்போம் – சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

Sunday, January 24th, 2021

சீனப்படைகள் எல்லையில் அத்து மீறினால் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய விமான படைத்தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா எச்சரித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் அமைந்த அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த புதன்கிழமை டெசர்ட் நைட்-21 என்ற பெயரில் இந்திய விமான படையின் மெகா பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியாவுக்கு அண்மையில் வந்தடைந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமான படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

மேலும், கிழக்கு லடாக்கில் சீனப்படைகள் அத்துமீறக் கூடிய வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார்.

Related posts: