கோர விபத்து : உத்தரப் பிரதேசத்தில் 17 பேர் பலி!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதித் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
படகு கவிழ்ந்ததில் எகிப்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!
பிரித்தானியாவில் லொறி- கார் மோதி கோர விபத்து - 5 பேர் பலி!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை - உள்விவகார அமைச்சர் சுயெல்லாபதவி நீக்கம்!
|
|