கொரோனா தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் பிரித்தானியர்கள்!

Wednesday, March 4th, 2020

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 39 ஆக இருந்த நிலையில் டெவனில் (Devon) உள்ள பாடசாலையில் ஒரு மாணவனுக்கு , கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தபட்டுள்ளது.

குறித்த மாணவன் வடக்கு இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவிகையில்; கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரஸ் தொற்றுக்களைக் கையாள எமது சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. அத்துடன் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவம் எங்களிடம் உள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கவும் மருத்துவ காரணங்களுக்காகவும் சுய-தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

மேலும் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts: