கைதான விஜய் மல்லையாவுக்கு 3 மணி நேரத்தில் பிணை!

Thursday, April 20th, 2017

பிரிட்டனில் கைதான இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா, 3 மணி நேரத்திற்குள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.விஜய் மல்லையாவை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் நேற்றுமுன்தினம் (18) கைது செய்தனர்.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி இந்திய ரூபாவிற்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார் மல்லையா.

அவரைத் தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்ததுடன், அவரைத் திருப்பியனுப்புமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், மத்திய லண்டன் பொலிஸ் நிலையத்தில் நேற்று ஆஜரான மல்லையாவை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் கைது செய்து, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சுமார் 3 மணித்தியாலங்களில் அவர் பிணை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.மல்லையா தாமாக முன்வந்து பொலிஸில் சரணடைந்து, நீதிமன்றத்தில் பிணை நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: