காலக்கெடு முடிந்தது: பதவியிலிருந்து விலக மறுக்கும் காம்பியா அதிபர்!

Saturday, January 21st, 2017

காம்பியாவின் நீண்ட நாள் அதிபராக பதவி வகித்த யாக்யா ஜமேவிற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவானது முடிந்துள்ள போதிலும், அவரை பதவி விலகுவதற்கு சம்மதிக்க ஒரு இறுதி முயற்சி ஒன்றை மேற்கு ஆபிரிக்க தலைவர்கள் மேற்கொள்கின்றனர்.

கினியா மற்றும் மோரிட்டேனியாவின் அதிபர்கள் ஜமேவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக தலைநகர் பஞ்சூலுக்கு விரைந்துள்ளனர்.அதன்படி, ஜமேவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவானது நான்கு மணி நேரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

அதுவரை ராணுவ நடவடிக்கைகளை மேற்கு ஆஃப்ரிக்க படைகள் நிறுத்தியுள்ளனகடந்த வியாழக்கிழமையன்று காம்பியாவின் புதிய அதிபராக அடாமா பாரோ பதவியேற்ற சில மணி நேரங்களில் படையினர் எல்லையைத்தாண்டி காம்பியாவிற்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

_93690640_gettyimages-629288880-1

Related posts: