கடத்தப்பட்ட யுவதி மூன்று வாரங்களின் பின் மீட்பு!

Wednesday, April 11th, 2018

பிரான்சில் கடத்தப்பட்ட 17 வயதான இலங்கை யுவதி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 20ஆம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த யுவதியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளன என இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

யுவதியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் இந்த சம்பவம் தொடர்பில் யுவதியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: