ஒப்புக்கொண்டார் மார்க் சக்கர்பர்க்!

Saturday, April 7th, 2018

கேம்பிரிட்ஜ் அனலிடிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இது முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும். அதில் 1.1 மில்லியன் பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என பி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை முதலில் வெளிப்படுத்திய கிறிட்டோபவர் வேலி, 50 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பேஸ்புக் நிறுவுநர் மார்க் சக்கர்பர்க் தகவல்களை பேஸ்புக் வழங்குகிறது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களின் பொறுப்பு என கருதியதாகத் தெரிவித்தார். அத்தகைய குறுகிய எண்ணம் தவறான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று எங்களுக்கு தெரிந்தவரை நாங்கள் அதிகமான பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிகிறது. தகவல்களை வழங்கும் தளங்களை உருவாக்குவது மட்டும் எங்கள் பொறுப்பல்ல. அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பதும் எங்கள் பொறுப்பு என மார்க் தெரிவித்துள்ளார்.

தொடரும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனத்துக்கு தலைமை தாங்குவதற்கு தான் சிறந்த நபர் என தெரிவித்துள்ளார் மார்க்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது என தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க். பேஸ்புக்கை தொடங்கியது நான் தான். எனவே இதில் என்ன நடந்தாலும் நான் தான் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts: