ஒடிஷாவில் 30 பேர் உயிரிழப்பு!

Tuesday, April 19th, 2016

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குறைந்தபட்சம் 30 பேர் வரையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் வீழ்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Related posts: