ஐரோப்பாவை பந்தாடும் சூறாவளி – 6 பேர் மரணம்!
Tuesday, October 31st, 2017மத்திய மற்றும் வட ஐரோப்பாவை தாக்கிய பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர் என செய்திள் வெளியாகியுள்ளன.
பலியானவர்கள் ஜெர்மனி போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுசெக் குடியரசின் அதி உயர் மலைப்பிரதேசத்தில் இந்த சூறாவளியின் வேகம் மணிக்கு 112 மைல் வேகத்தில் வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக போலந்து மற்றும் செக்குடியரசு நாடுகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புக்கள் மின்சார விநியோகம் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜேமன் தொடரூந்து தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளமையால் தொடரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.போலந்தில் பாரிய விருச்சங்கள் வீழ்ந்த நிலையில் பல நெடுஞ்சாலை போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related posts:
இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து துவம்சம்.. ! தீவிரவாத முகாம்கள் பல காலி!
எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு?
போப் பிரான்சிஸை சந்தித்தார் ட்ரம்ப்!
|
|