எரிவாயு வாங்குவதை நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் – ஐரோப்பிய நாடுகளுக்கு புடின் கடும் எச்சரிக்கை!

Friday, April 15th, 2022

எங்களிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்தினால், பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த புடின் கூறுகையில், “ ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக மாற்று வழிகளை முயற்சிக்கும் ஐரோப்பிய நாட்டிற்கு கடும் வேதனை ஏற்படும். ஐரோப்பாவுக்கு தற்போதைய நிலையில் நியாயமான மாற்று எதுவும் இல்லை.

ஐரோப்பாவுக்கு பிற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்து குறிப்பாக அமெரிக்காவில் இருந்து எரிவாயு அனுப்பப்பட்டால், அது நுகர்வோர்களுக்கு கடுமையான விலையேற்றத்தை கொடுக்கும். இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். ஐரோப்பிய பொருளாதாரத்தில் போட்டித்தன்மை பாதிக்கும்” என்றார்.

ஐரோப்பிய யூனியன் தங்களின் இயற்கை எரிவாயு தேவைக்கு 40 சதவீதம் ரஷ்யாவையே சார்ந்துள்ளது. அதேபோல், எண்ணெய் தேவையை 25 சதவீதம் ரஷ்யாவே பூர்த்தி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: