எகிப்தில் ஒரே நேரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Saturday, February 23rd, 2019

எகிப்தில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்திய அரச சட்டவாதியான காசிம் பராகாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேரில் 9 பேருக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த வாகனம் மீது, மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 28 பேரும் குற்றவாளிகள் என தெரிவித்த நீதிமன்றம் அனைவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

கெய்ரோவில் உள்ள சிறைக்கூடத்தில் இந்த 9 பேரினதும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, இந்த மாதத்தில் மட்டும் இந்த 9 பேருடன் சேர்த்து மொத்தமாக 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: